செய்திகள்
தேவகோட்டையில் பேராசிரியை வீட்டில் 90 பவுன்-ரூ.1¼ லட்சம் கொள்ளை
தேவகோட்டையில் பேராசிரியை வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 90 பவுன் நகை, ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயமணி, அரசு கலைக்கல்லூரி பேராசிரியை. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.
இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதில், 90 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளைபோய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயமணி, அரசு கலைக்கல்லூரி பேராசிரியை. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.
இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதில், 90 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளைபோய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.