செய்திகள்
சிங்கம்புணரி அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
சிங்கம்புணரி அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
சிங்கம்புணரி:
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது30), இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆவான் என்பவரின் மகன் சரவணக்குமார் (27) ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர். புதூர் ஒன்றியம் கானாபட்டி விலக்கில் சென்றபோது பொன்னமராவதி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பூபதிராஜா, சரவணக்குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இது குறித்த புகாரின்பேரில் புழுதிபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.