செய்திகள்
விநாயகர் சிலைகள் வேனில் ஏற்றப்படும் காட்சி.

விநாயகர் சதுர்த்தி விழா: 4 மாவட்டத்துக்கு சிலைகள் அனுப்பும் பணி தீவிரம்

Published On 2016-09-02 15:34 IST   |   Update On 2016-09-02 15:34:00 IST
பவானிசாகர் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 4 மாவட்டத்துக்கு சிலைகள் அனுப்பும் பணி தீவிரதமாக நடைபெற்று வருகிறது.
பு,புளியம்பட்டி:

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு தேவையான 5000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி பகுதியில் தயாரிக்கப்பட்டு நேற்று முதல் சிலைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

மயில் வாகனம், பசுவாகனம், சிங்கம், எலி, அன்னம், சிவலிங்கம், முருகன், சித்திபுத்தி, நாகபாம்பு, கருடபகவான், யானை, மூன்றுமுக விநாயகர், மங்கள விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் மூன்றரை அடி முதல் 11 அடி வரை உள்ள மொத்தம் 1300 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகிதக்கூழ், கிழங்குமாவு, வாட்டர்கலர் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது எளிதில் கரையும் வகையிலும், நீர்மாசு ஏற்படாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி மாநகரம், நகர்ப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் இந்துமுன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் காவல்துறையில் அனுமதி பெற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடுவர்.

Similar News