செய்திகள்

புதுக்கோட்டை அருகே இன்று என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற ரெயில்

Published On 2016-08-06 12:15 IST   |   Update On 2016-08-06 12:15:00 IST
புதுக்கோட்டை அருகே இன்று என்ஜின் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றதால் திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.
புதுக்கோட்டை:

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை காரைக்குடியில் சென்னைக்கு புறப்பட்டது.

புதுக்கோட்டை அருகே செல்லும் போது என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நடுவழியில் நின்றது. பின்னர் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரெயிலை நிறுத்தினார். இதையடுத்து பழுதை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக 7.40 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

பழுதான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News