செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

Published On 2016-07-26 11:51 IST   |   Update On 2016-07-26 11:51:00 IST
ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவில் இடி-மின்னலுடன் விடிய-விடிய மழை கொட்டியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் நேற்று மதியம் வரை கடுமையாக வெயில் அடித்தது. மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் சூழ்ந்தன. ஆனால் ஒருசில மழை துளிகள் மட்டும் போட்டது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவில் இடி-மின்னலுடன் விடிய-விடிய மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெப்ப சலனத்தால் பெய்த இந்த மழையால் மாவட்டம் முழுவழம் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளுமையாக காட்சி அளித்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்துப் பாளையத்தில் 81 மி.மீட்டர் மழையும், மொடக்குறிச்சியில் 70 மி.மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது.

கோபி, ஈரோடு, பவானி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய-விடிய மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News