செய்திகள்

வழி தவறி கோடியக்கரை வந்த இலங்கை தம்பதிக்கு காவல் நீட்டிப்பு: வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-07-07 11:03 IST   |   Update On 2016-07-07 11:03:00 IST
வழி தவறி கோடியக்கரை வந்த இலங்கை தம்பதிக்கு காவல் நீட்டிப்பதாக வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேதாரண்யம்:

இலங்கை வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி பகுதியை சேர்ந்தவர் துஷ்வந்த். இவரது மனைவி துவாரகா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் துவாரகா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவர்கள் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். கோவிலை சுற்றி பார்த்து விட்டு படகுதுறைக்கு வந்தபோது அவர்கள் வந்த படகை காணவில்லை.

இதனை தொடர்ந்து 3 பேரும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். படகின் கயிறு அறுந்து கடலுக்குள் சென்றது.

கோடியக்கரை அருகே அவர்கள் படகில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை நாகை மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அழைத்து வந்தனர்.

அவர்களை கைது செய்த போலீசார் பாஸ்போர்ட் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வருகிற 20-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து 3 பேரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News