செய்திகள்
செங்கல்பட்டு அருகே நாயை அடித்து கொன்றது: கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை உருவம் பதிவு
செங்கல்பட்டு அருகே வனப்பகுதியில் நாயை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியின் உருவம் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள அஞ்சூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நாயை சிறுத்தைப்புலி அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாஸ் உத்தரவுப்படி செங்கல்பட்டு வனச்சரகர் கோபு தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அஞ்சூர் வனப்பகுதியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமிரா மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கூண்டும் வைத்தனர்.
இந்த நிலையில் காமிராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமிராவில் சுமார் 7 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள சிறுத்தைப்புலி கம்பீரமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
மேலும் அந்த காமிராவில் முள்ளம் பன்றி, முயல் ஆகிய விலங்குகள் செல்லும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இதைத் தொடர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்கள். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிக கூண்டுகள், கண்காணிப்பு கேமிரா வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான பணி விரைந்து நடந்து வருகிறது.
சிறுத்தை நடமாட்டத்தால் அஞ்சூர் கிராம மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள தென்னேரி, புலிக்குடிவனம், பட்டரைவாக்கம், ஈச்சங்கரனை, கருநீலம், கொண்டமங்கலம் ஆகிய வனப்பகுதி கிராமத்திலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம், இரவில் வீட்டு முன்பு விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்ட எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்காணிப்பு கேமிராவில் பதிவான சிறுத்தை புலிக்கு 12 வயது இருக்கும். தண்ணீர் தேடி அது கிராம பகுதிக்குள் புகுந்து இருக்கலாம். பொது மக்களுக்கு ஆபத்து இல்லாமல் அதனை கூண்டு வைத்து விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இதேபோல் சிறுத்தைப்புலி அஞ்சூர் வனப்பகுதிக்குள் புகுந்தது. அதன் உருவமும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்த போது அந்த சிறுத்தைப்புலி சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு அருகே உள்ள அஞ்சூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நாயை சிறுத்தைப்புலி அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாஸ் உத்தரவுப்படி செங்கல்பட்டு வனச்சரகர் கோபு தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அஞ்சூர் வனப்பகுதியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமிரா மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கூண்டும் வைத்தனர்.
இந்த நிலையில் காமிராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமிராவில் சுமார் 7 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள சிறுத்தைப்புலி கம்பீரமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
மேலும் அந்த காமிராவில் முள்ளம் பன்றி, முயல் ஆகிய விலங்குகள் செல்லும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இதைத் தொடர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்கள். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிக கூண்டுகள், கண்காணிப்பு கேமிரா வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான பணி விரைந்து நடந்து வருகிறது.
சிறுத்தை நடமாட்டத்தால் அஞ்சூர் கிராம மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள தென்னேரி, புலிக்குடிவனம், பட்டரைவாக்கம், ஈச்சங்கரனை, கருநீலம், கொண்டமங்கலம் ஆகிய வனப்பகுதி கிராமத்திலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம், இரவில் வீட்டு முன்பு விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்ட எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்காணிப்பு கேமிராவில் பதிவான சிறுத்தை புலிக்கு 12 வயது இருக்கும். தண்ணீர் தேடி அது கிராம பகுதிக்குள் புகுந்து இருக்கலாம். பொது மக்களுக்கு ஆபத்து இல்லாமல் அதனை கூண்டு வைத்து விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இதேபோல் சிறுத்தைப்புலி அஞ்சூர் வனப்பகுதிக்குள் புகுந்தது. அதன் உருவமும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்த போது அந்த சிறுத்தைப்புலி சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.