செய்திகள்

மீனம்பாக்கத்தில் 70 அடி உயர மெட்ரோ ரெயில் தூணில் சிக்கிய நாய் மீட்பு

Published On 2016-06-30 09:12 IST   |   Update On 2016-06-30 09:12:00 IST
மீனம்பாக்கத்தில் 70 அடி உயர மெட்ரோ ரெயில் தூணில் சிக்கிய நாய் உயிருடன் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே மெட்ரோ ரெயில் பணிக்காக தூண் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 70 அடி உயரம் கொண்ட இந்த ரெயில்வே தூணில் உள்ள இடைப்பகுதியில் ஒரு நாய் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் கத்திக்கொண்டு இருந்தது.

கடந்த 15 நாட்களாக அந்த நாய் தூணில் சிக்கித்தவித்துக்கொண்டிருப்பதை கண்ட அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள், இதுபற்றி கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கிண்டி புளூ கிராஸ் அமைப்பினர், விமான நிலைய போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலே ஏறி நாயை பிடிக்க முயன்றால் அது பயந்து போய் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தூணின் அடியில் அனைவரும் வலையை பிடித்துக்கொண்டு நின்றனர்.

பின்னர் புளூ கிராஸ் அமைப்பினர் தூணின் மேலே சென்று நாயை பிடிக்க முயன்றனர். பயந்து போன நாய் அங்கிருந்து தவறி கீழே இருந்த வலையில் விழுந்தது. உயிருடன் மீட்கப்பட்ட அந்த நாய்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News