செய்திகள்

இளையான்குடி அருகே தே.மு.தி.க. செயலாளர்-தாய் வெட்டிக்கொலை: அ.தி.மு.க. பிரமுகர் வெறிச்செயல்

Published On 2016-04-16 20:05 IST   |   Update On 2016-04-16 20:05:00 IST
தே.மு.தி.க. செயலாளர் மற்றும் அவரது தாயை, சொத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சீனிவாசன் (வயது45), தே.மு.தி.க. ஊராட்சி செயலாளர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், உறவினருமான கணபதி (38) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்த வந்தது.
இந்த நிலையில் சீனிவாசனின் வீட்டில் அவரது தாய் அங்காள ஈஸ்வரி (68) அமர்ந்திருந்தார். அப்போது கணபதி அங்கு வந்தார்.

அவர் கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்தி ருந்த அரிவாளால் அங்காள ஈஸ்வரியை வெட்டினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணபதி அருகில் நாடக மேடையில் படுத்திருந்த சீனிவாசனையும் வெட்டிக்கொலை செய்தார்.

அதே ஊரை சேர்ந்த தமிழழகன் (27) வீட்டிற்கு சென்ற கணபதி, அவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தாய்-மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பபடுத்தியது. இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், பங்காளிகளான சீனிவாசன், கணபதி இடையிலான சொத்து பிரச்சினை சமீபத்தில் சுமூகமாக தீர்க்கப்பட்ட நிலையில் இந்த இரட்டைக்கொலை நடந்துள்ளது ஏன் என்பது தெரியவில்லை என்றனர்.

அதேபோல் தமிழழகன் ஏன் வெட்டப்பட்டார் என்பதும் தெரியவில்லை என்று அவர் கூறினர்.

Similar News