செய்திகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ராஜன் செல்லப்பா

Published On 2016-04-11 10:19 GMT   |   Update On 2016-04-11 10:18 GMT
மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று வடக்கு தொகுதி வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறினார்.

மதுரை:

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா இன்று தொகுதியின் தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பகுதி செயலாளர்கள் ஜெயவேல், அண்ணாநகர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:–

மதுரை வடக்கு தொகுதி யின் அ.தி.மு.க. வேட்பாளராக கழக பொதுச்செயலாளர் அம்மா என்னை அறிவித்துள்ளார். இதற்காக என் வாழ்நாள் முழுவதும் நான் அம்மாவுக்காக பணி செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

மதுரை வடக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வாங்கி நாம் வெற்றிபெற வேண்டும். அதற்காக கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று சந்தித்து அம்மா அரசின் சாதனை களை எடுத்துக்கூற வேண் டும்.

6–வது முறையாக அம்மாவை முதல்வராக்கிட அயராது உழைத்து அம்மாவுக்கும், கழகத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News