தமிழ்நாடு

ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதி இடிந்து விபத்து: 2 பேர் பலி?

Published On 2024-03-28 15:15 GMT   |   Update On 2024-03-28 15:16 GMT
  • ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதி இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது.
  • இதில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேர் சிக்கி உள்ளனர்.

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் தனியார் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த மதுபான விடுதி கட்டடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விபத்தில் சிக்கியது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News