தமிழ்நாடு

மிச்சாங் புயல் பாதிப்பு: இதுவரை 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது- தமிழக அரசு

Published On 2023-12-11 12:56 GMT   |   Update On 2023-12-11 12:56 GMT
  • 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
  • சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர் வழங்கப்பட்டது.

மேலும், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாக தமிழ் அரசு அறிவித்துள்ளது.


Tags:    

Similar News