தமிழ்நாடு

சுகாதார சீர்கேட்டை கண்டித்து காஞ்சிபுரத்தில் 12-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-10-10 07:36 GMT   |   Update On 2023-10-10 07:36 GMT
  • அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.
  • ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடுகளை சரி செய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்கவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (12-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News