விளையாட்டு
புரோ கபடி லீக்: புனேவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது தெலுகு டைட்டன்ஸ்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
இன்று நடந்த போட்டியில் தெலுகு டைட்டன்ஸ், புனேரி பல்தான் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது தெலுகு டைட்டன்ஸ் அணி பெற்ற 9வது வெற்றி ஆகும். இதன்மூலம் பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துள்ளது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 33-23 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.