விளையாட்டு

கொல்கத்தாவில் லார்ட்ஸ் பெவிலியன்

Published On 2022-09-29 05:56 GMT   |   Update On 2022-09-29 05:56 GMT
  • கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.
  • சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள பால்கனியில் நின்றபடி வீரர்கள் போட்டியை ரசிப்பதையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் கவுரவமாக நினைப்பார்கள்.

2002-ம் ஆண்டு நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிஆட்டத்தில் இந்தியா 326 ரன்கள் இலக்கை 'சேசிங்' செய்ததையும், அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் பால்கனியில் நின்றபடி பனியனை கழற்றி சுழற்றியதும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

தற்போது கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர்.

அதை கங்குலி நேற்று திறந்து உற்சாகமாக கொடியசைத்த காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

Tags:    

Similar News