விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி

Published On 2025-10-16 04:00 IST   |   Update On 2025-10-16 04:00:00 IST
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

கோபன்ஹேகன்:

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி, மேத்யூ கிரிம்லி ஜோடியுடன் மோதியது.

முதல் செட்டை 17-21 என சாத்விக் ஜோடி இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-11, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News