விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்

Published On 2025-06-11 07:07 IST   |   Update On 2025-06-11 07:07:00 IST
  • உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
  • 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் சீன வீராங்கனை வாங் ஜிஃபை தங்க பதக்கம் வென்றார்.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் 252.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை வாங் ஜிஃபை தங்க பதக்கமும் கொரியாவின் குவான் யூன்ஜி 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றனர். 231.2 புள்ளிகள் பெற்று இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்றார்.

Tags:    

Similar News