விளையாட்டு

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற டென்ஷி இவாமி- சாரா வகிடா

Published On 2023-08-19 09:43 GMT   |   Update On 2023-08-19 09:43 GMT
  • ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார். 2-வது இடத்தை கியான் மார்டின் பிடித்தார். இதேபோல பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2-வது இடத்தை ஷினோ மட்சுடா பிடித்தார்.

Tags:    

Similar News