விளையாட்டு

புரோ ஹாக்கி லீக்: பெனால்டி ஷூட் அவுட் முறையில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி

Published On 2024-02-19 08:37 GMT   |   Update On 2024-02-19 08:37 GMT
  • 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார்.
  • 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி, லால்ரெம்சியாமி கைகொடுக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது....

Tags:    

Similar News