கால்பந்து

உலகக்கோப்பை தகுதிச்சுற்று: பிரேசிலை 4-1 என துவம்சம் செய்தது அர்ஜென்டினா

Published On 2025-03-26 14:37 IST   |   Update On 2025-03-26 14:37:00 IST
  • முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
  • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடிக்க 4-1 என வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காயம் காரணமாக அர்ஜென்டினா அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை.

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். 17-வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த கோலை என்ஜோ பெர்னாண்டஸ் அடித்தார். 26-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

37-வது நிமிடத்தில் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேர ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 71-வது நிமிடத்தில் கியுலியானோ சிமியோன் கோல் அடிக்க அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 4-1 என வெற்றி பெற்றது.

தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. இதன் புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா 14 போட்டிகளில் 10-ல் வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News