விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறியது இந்திய ஜோடி

Published On 2025-11-25 20:01 IST   |   Update On 2025-11-25 20:01:00 IST
  • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
  • பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

லக்னோ:

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி- மலேசியாவின் செங் சூ ஹை- தன் ஜிங் யீ ஜோடி உடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 19-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News