INDvsPAK போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது- சாஹிப்சாதா பர்ஹான்
- பிப்ரவரி 15-ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
- இந்தியாவுடன் மோதுவதை சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் எதிர் நோக்கி உள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் போட்டி பெரிய போட்டி எனவும் இந்த போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்கும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.
இந்நிலையில் இந்தியாவுடன் மோதுவதை சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம் எனவும் இந்தப் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது எனவும் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்று நாங்கள் நினைக்க மாட்டோம். அதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே விளையாடுவோம். இந்தப் போட்டி ஒருதலைப்பட்சமாக இருக்காது.
என பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கூறினார்.