கிரிக்கெட் (Cricket)

பாலசுப்ரமணியம் சச்சின் சதம்: கோவை கிங்ஸ் 203 ரன்கள் குவிப்பு

Published On 2025-06-28 22:49 IST   |   Update On 2025-06-28 22:49:00 IST
  • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

திண்டுக்கல்:

நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் டக் அவுட்டானார். சுரேஷ் லோகேஷ்வர் 3 ரன்னில் வெளியேறினார். விஷால் வைத்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார்.

ஆட்டத்தின் 18வது ஓவரில் ஷாருக் கான் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அவர் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News