கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பை: இந்திய அணியில் இருந்து பிரதிகா ராவல் விலகல்- ஷபாலி வர்மா சேர்ப்பு

Published On 2025-10-27 21:17 IST   |   Update On 2025-10-27 21:17:00 IST
  • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
  • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

Tags:    

Similar News