கிரிக்கெட் (Cricket)

பாலசுப்ரமணியம் சச்சின், வித்யுத் அபாரம்: சேலத்தை வீழ்த்தியது கோவை

Published On 2025-06-29 00:45 IST   |   Update On 2025-06-29 00:45:00 IST
  • முதலில் ஆடிய கோவை அணி 203 ரன்களைக் குவித்தது.
  • அடுத்து ஆடிய சேலம் 135 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

திண்டுக்கல்:

நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4வது கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்றைய 26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்களைக் குவித்தது. பாலசுப்ரமணியம் சச்சின் அபாரமாக ஆடி சதமடித்து 116 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 14 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. அபிஷேக் 32 ரன்னும், லோகேஷ்வர் 29 ரன்னும், நிதிஷ் ராஜகோபால் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தேவ் ராகுல் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், சேலம் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.

கோவை அணி சார்பில் வித்யுத் 5 விக்கெட்டும், திவாகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News