ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு- ரூ.76,100 கோடியாக குறைந்தது
- ஐ.பி.எல். அணிகளை பொறுத்தவரை மதிப்பில் ஆர்.சி.பி. முதல் இடத்தில் உள்ளது.
- அதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.
மும்பை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகில் அதிக அளவில் வருவாயை ஈட்டி தரும் போட்டிகளில் ஒன்றாக ஐ.பி.எல். இருக்கிறது. இதனால் அதன் மதிப்பு உச்சத்துக்கு சென்றது.
இந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஐ.பி.எல்.லின் மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை சந்தித்து உள்ளது.
2023-ல் ரூ.92,500 கோடியில் இருந்த ஐ.பி.எல். மதிப்பீடு 2024-ல் ரூ.82,700 கோடியாகவும், இந்த ஆண்டில் ரூ.76,100 கோடியாகவும் சரிந்து உள்ளது. 2025-ம் ஆண்டில் ஒட்டு மொத்த மதிப்பு 8 சதவீதம் குறைந்து உள்ளது.
அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் மதிப்பு பெரும்பாலும் மாறாமல் நிலையானதாக இருக்கும் என்று ஆய்வு குழு தெரிவித்து உள்ளது. ஒளிபரப்பு உரிமம், விளம்பரதாரர்கள் உள்ளிட்டவற்றால் இந்த சரிவு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். அணிகளை பொறுத்தவரை மதிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.