ஐ.பி.எல்.(IPL)
null

சூர்யவன்ஷியை தூக்கி வச்சி கொண்டாடாதீங்க: அதுவே அவருக்கு அழுத்தத்தை கொடுக்கும்- கவாஸ்கர்

Published On 2025-05-02 14:42 IST   |   Update On 2025-05-02 16:12:00 IST
  • தாம் எதிர்கொண்ட முதல் பந்தலையே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார்.
  • தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.

மும்பை:

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ், டக் அவுட்டில் வெளியேறினார். 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி உலக அளவில் பிரபலமானார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வைபவை ரொம்ப தூக்கி கொண்டாடி அவருக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையருக்கான டெஸ்ட் போட்டியில் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே அவர் சதம் அடித்திருந்தார். அதுவும் 13 வயதில் இந்த ரெக்கார்டு அவர் நிகழ்த்தி இருந்தார். அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார்.

இதன் மூலம் அவர் மென்மேலும் சிறந்த வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது. தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது.

இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இந்த வீரர் சிக்ஸர் அடிக்கத்தான் முயற்சி செய்வார். எனவே நாம் அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசி அவருடைய விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் வைபவ், தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடுவார்.

என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News