ஐ.பி.எல்.(IPL)
நா திரும்ப வந்துட்டன்னு சொல்லு.. ஆர்.சி.பி அணியில் இணைந்த ஜோஷ் ஹேசில்வுட்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
- ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் மீண்டும் பெங்களூரு அணியில் இருந்துள்ளார். இது தொடர்பான விடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.