ஐ.பி.எல்.(IPL)
ஐபிஎல் 2025: டெல்லிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு
- மழை பெய்த போதிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
- போட்டி 8.30 மணிக்கு தொடங்குகிறது. ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
ஐபிஎல் சீசனின் 58ஆவது ஆட்டம் இன்று தரம்சாலாவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டப்படவில்லை. அதனைத்தொடர்ந்து போட்டி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. பின்னர் மழை நின்றதும் போட்டியை நடத்துவதற்கான பணியை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர்.
மைதானம் தயாரானதால் 8.15 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.