கிரிக்கெட் (Cricket)

இந்தியா அபார பந்து வீச்சு- 127 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

Published On 2025-09-14 21:56 IST   |   Update On 2025-09-14 22:00:00 IST
  • இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
  • 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

பாகிஸ்தான் அணி 10வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 49 ரன்களை எடுத்து திணறியது.

இதில், முதல் பந்திலேயே சயீம் அயூப் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, முகமது ஹாரீஸ் 6 ரன்களிலும், ஃபக்கார் சமான் 45 ரன்களிலும், சல்மான் அகா 49 ரன்களிலும், ஹசான் நவாஸ் 5 ரன்களிலும், முகமது நவாஸ் 6 ரன்களிலும், சஹீ்ப்சதா ஃபர்ஹான் 40 ரன்களிலும், ஃபஹீம் அஷ்ரப் 11 ரன்களிலும், சுபியாஜ் முக்கீம் 10 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.

குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, பும்ரா, அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.

இதன்மூலம், 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்கை நோக்கி இந்தியா பேட்டி செய்ய களமிறங்குகிறது. 

Tags:    

Similar News