கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பையில் முதல் வீரர்: மோசமான சாதனை படைத்த பாபர் அசாம்

Published On 2026-02-10 21:22 IST   |   Update On 2026-02-10 21:22:00 IST
  • பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
  • பாபர் அசாம் முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

முன்னதாக தொடர்ந்து தடுமாறி வரும் பாபர் அசாம், முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை, மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் படைத்தார்.

குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள் அடித்த வீரர்கள் விவரம்:-

பாபர் அசாம் - 110.4

மொஹமத் ஹஃபீஷ் - 111.8

குமார் சங்கக்கரா - 112.2

கேன் வில்லியம்சன் - 112.5

Tags:    

Similar News