கிரிக்கெட் (Cricket)

பும்ராவை ரோபோ அல்லது நாட்டின் பொக்கிசம் என்பேன்: சூர்யகுமார் யாதவ் புகழாரம்

Published On 2026-03-08 17:00 IST   |   Update On 2026-03-08 17:00:00 IST
  • இங்கிலாந்துக்கு எதிராக 16-வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார் பும்ரா.
  • 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார்.

இந்தியா- இங்கிலாந்து இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. இந்தியா 253 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இங்கிலாந்தை இலக்கை நெருங்கி வந்து 7 ரன்னில் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

இந்தியாவின் வெற்றிக்கு பும்ராவின் பந்து வீச்சு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவர் 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அதிலும், 16-வது ஓவரில் 8 ரன்களும், 18-வது ஓவரில் 6 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முக்கியமான நேரத்தில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது இங்கிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால்தான் ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூட, இந்த விருதுக்கு பும்ரா தகுதியானவர் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நான் பும்ராவை பற்றி விவரிப்பது என்றால், அவரை ரோபா அல்லது இந்தியாவின் பொக்கிசம் என்பேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News