கிரிக்கெட் (Cricket)

ரிஷப் பண்டிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்: காரணம் இதுதான்

Published On 2025-08-08 03:11 IST   |   Update On 2025-08-08 03:11:00 IST
  • இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
  • இந்திய அணியினரின் சிறந்த பேட்டிங்கால் இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

லண்டன்:

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அவுட்டானார். காயம் காரணமாக 5-வது டெஸ்டில் இருந்து ரிஷப் விலகினார்.

இதுபோல, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் இடது தோளில் காயமடைந்தார். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார்.

ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன.

இதற்கிடையே, ரிஷப் பண்ட் தனது சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், சல்யூட் என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், உங்கள் அன்புக்கு நன்றி. எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News