கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமனம்

Published On 2025-04-07 17:29 IST   |   Update On 2025-04-07 17:29:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்தது.
  • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதே பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

லண்டன்:

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News