ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை: புஜாராவை புகழ்ந்த குஜராத் முதல் மந்திரி
- அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார்.
அகமதாபாத்:
அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்
ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். புஜாரா ஓய்வு குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் புஜாராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பூபேந்திர படேல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தின் பெருமைக்குரிய செதேஷ்வர் புஜாராவின் ஒரு குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம். உங்கள் அமைதியான இருப்பு, குறைபாடற்ற நுட்பம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதி - குறிப்பாக இந்தியாவின் வரலாற்று வெளிநாட்டு வெற்றிகளில் - தேசத்திற்கு போற்றுவதற்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளன. ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை குஜராத்தின் கிரிக்கெட் உணர்வை நீங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.