கிரிக்கெட் (Cricket)

வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கம்பீர் கூறியது என்ன? அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ஓபன் டாக்

Published On 2025-08-08 15:16 IST   |   Update On 2025-08-08 15:16:00 IST
  • அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார்.
  • 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்றிருந்தார். அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாக சில தகவல்களை அவரது தந்தை கூறியுள்ளார்.

அதில், அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவருக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை. அவரின் உழைப்பிற்கான பலன் அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என ஒட்டு மொத்த பயிற்சியாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என கவுதம் கம்பீர் என்னிடம் கூறினார்.

Tags:    

Similar News