கிரிக்கெட் (Cricket)
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல்அவுட்
- ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதம் விளாசினர்.
- பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதத்தால் இந்தியா 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 11 ரன்னிலும், பும்ரா ரன்ஏதும் எடுக்காமலும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க இருந்தது. பேட்டர்கள் தயாரான போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.