கிரிக்கெட் (Cricket)

முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியா 40 ஓவரில் 213/6

Published On 2025-03-04 17:20 IST   |   Update On 2025-03-04 17:20:00 IST
  • ஆஸ்திரேலிய அணி 28 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.
  • ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்து 73 ரன்னில் அவுட்டானார்.

துபாய்:

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். கோனோலி ஷமி பந்து வீச்சில் டக் அவுட்டானார்.

அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 29 ரன்னில் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இங்கிலீஸ் 11 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

5வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-அலெக்ஸ் கேரி ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 7 ரன்னில் அவுட்டானார்.

ஆஸ்திரேலியா 40 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் ஷமி 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News