கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் அணிக்கு அஸ்வின் கோரிக்கை

Published On 2025-09-21 11:45 IST   |   Update On 2025-09-21 11:45:00 IST
  • இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
  • கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக நடுவரை பாகிஸ்தான் பகடையாக பயன்படுத்தியது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 'சூப்பர்4' சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.

ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியிருந்தது. ஆகவே இப்போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேட்டி அளித்த அஸ்வின், "இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிசி-ஐ ஒன்றும் சொல்ல முடியாமல் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பகடையாக பயன்படுத்தியது,

பாகிஸ்தானுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் போட்டியை சுவாரசியமற்றதாக மாற்றுகிறீர்கள். நீங்கள் 150 ரன்களுக்கு அவுட்டாகி, இரண்டாவது இன்னிங்சில போட்டியை பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News