கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் கிரிக்கெட்: முச்சதம் அடித்த முதல் இந்தியர்- மும்பை வீராங்கனை சாதனை

Published On 2025-01-13 13:00 IST   |   Update On 2025-01-13 13:00:00 IST
  • 14 வயதான இரா ஜாதவ் 346 ரன்கள் (157 பந்து, 42 பவுண்டரி, 16 சிக்சர்) விளாசி பிரமிக்க வைத்தார்.
  • பெண்கள் ஜூனியர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் லிசெல் லீ 427 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக நீடிக்கிறது.

பெங்களூரு:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடந்து வருகிறது.

இதில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய 14 வயதான இரா ஜாதவ் 346 ரன்கள் (157 பந்து, 42 பவுண்டரி, 16 சிக்சர்) விளாசி பிரமிக்க வைத்தார்.

இந்த வகை போட்டியில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இருப்பினும் பெண்கள் ஜூனியர் கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் லிசெல் லீ 427 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆடிய மேகாலயா வெறும் 19 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 544 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News