விளையாட்டு
கராத்தே வீரர்களுக்கான பட்டய தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள்.

திண்டுக்கல்லில் கராத்தே வீரர்களுக்கான பட்டயத் தேர்வு

Published On 2022-05-17 08:08 GMT   |   Update On 2022-05-17 08:08 GMT
திண்டுக்கல்லில் கராத்தே வீரர்களுக்கு நடந்த தேர்வில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே மரியநாதபுரம் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கான பட்டயத் தேர்வு நடைபெற்றது.இதற்கு மாஸ்டர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். இதில் பட்டய தேர்வில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பட்டயம், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் வக்கீல் ஜான் கென்னடி, ஆசிரியர் அமல்ராஜ், வீர தமிழர் விளையாட்டுக்கழக பயிற்சியாளர்கள் ஜோசப் செந்தில்குமார், சரவணன் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர்கள் ஞானகுமார், ஆலன் சிபு ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News