விளையாட்டு
3 விக்கெட் வீழ்த்திய உம்ரான் மாலிக்

ஆண்ட்ரூ ரசல் அதிரடி - ஐதராபாத்துக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

Published On 2022-05-14 15:57 GMT   |   Update On 2022-05-14 15:57 GMT
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
புனே:

ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.

தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

6வது விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.
Tags:    

Similar News