விளையாட்டு
விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ் 4 விக்கெட்- பஞ்சாப் அணியை 137 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா

Published On 2022-04-01 21:26 IST   |   Update On 2022-04-01 21:26:00 IST
பஞ்சாப் கிங்ஸ் அணியில், அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே, 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் விளாசினார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவர்களில், 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 16 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் விளாசினார். ரபாடா 16 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டிம் சவுத்தி 2 விக்கெட், சிவம் மவி, சுனில் நரைன், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

Similar News