விளையாட்டு
தீபக் ஹூடா

ஐபிஎல் 2022- குஜராத் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ

Published On 2022-03-28 22:02 IST   |   Update On 2022-03-28 22:02:00 IST
தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்த நிலையில், தீபக் ஹூடா (55 ரன்கள்), ஆயுஷ் பதோனி (54 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.

குஜராத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் எடுத்தார். வருண் ஆரோன் 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.

Similar News