விளையாட்டு
ரவி சாஸ்திரி

முட்டாள்தனமான விதிகளால் வர்ணனையை தொடர முடியவில்லை- கிரிக்கெட் வாரியம் மீது ரவி சாஸ்திரி பாய்ச்சல்

Published On 2022-03-24 09:08 GMT   |   Update On 2022-03-24 09:08 GMT
இந்தியாவின் வருங்கால கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் காணலாம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு வர்ணனையாளராக பணி புரிந்தார்.

இந்திய அணி சென்ற 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையில் ரவி சாஸ்திரியின் வர்ணனை ஆட்டத்தை பார்ப்பவர்கள் மத்தியில் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு அவரால் வர்ணனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ரவிசாஸ்திரி தற்போது பயிற்சியாளராக இல்லை. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரவிசாஸ்திரி மீண்டும் வர்ணனையாளராக களம் இறங்க இருக்கிறார்.

இந்தநிலையில் முட்டாள் தனமான விதிகளால் வர்ணனையை தொடர முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) ரவிசாஸ்திரி மறைமுகமாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இது ஐ.பி.எல்.லின் 15-வது சீசன். இதில் முதல் 11 ஆண்டுகள் நான் வர்ணனை செய்தேன். ஆனால் சில முட்டாள்தனமான விதிகளால் கடந்த சில சீசன்களாக அதை என்னால் தெரடர முடியவில்லை.

இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பல வீரர்கள் தங்களை கண்டறிய ஐ.பி.எல். ஒரு வாய்ப்பாக உள்ளது. விராட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ரோகித் சர்மா ‘ஒயிட்பால்’ போட்டிகளுக்கு ஒரு சிறந்த கேப்டன். அதே நேரம் இந்தியாவின் வருங்கால கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட், ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் காணலாம்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
Tags:    

Similar News