விளையாட்டு
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து 3-வது வெற்றி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது.
தொடக்க வீராங்கனை ஹிதரா அமீன் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். அதற்கு அடுத்த படியாக ஹிதரா நவாஸ் 23 ரன் எடுத்தார். 3 வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர். இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் புருண்ட், ஷோபி எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேனி வயட் 68 பந்தில் 11 பவுண்டரியுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி பெற்ற 3-வது வெற்றியாகும். அந்த அணி 6 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவும் அதே புள்ளியுடன் உள்ளது. ஆனால் இங்கிலாந்து ரன்ரேட்டில் முன்னிலையில் இருக்கிறது. இங்கிலாந்து கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசதத்தை எதிர் கொள்கிறது. பாகிஸ்தான் 5-வது தோல்வியை தழுவியது.