விளையாட்டு
ஐ.பி.எல். போட்டியை காண 25 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி

ஐ.பி.எல். போட்டியை காண 25 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி

Published On 2022-03-24 10:36 IST   |   Update On 2022-03-24 10:36:00 IST
ஐபிஎல் போட்டியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனா தொற்று காரணமாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்துக்கு திரும்பும் ரசிகர்களை ஐ.பி.எல். போட்டி வரவேற்கிறது. 

இந்த போட்டி மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும். மும்பை, நவிமும்பை, புனேயில் நடைபெறும் இந்த போட்டியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

Similar News