விளையாட்டு
யாரும் எதிர்பார்க்காத தொகையில் ஏலம் போன இஷான் கிஷான்
15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் அணி அதிக விலைக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் யாரும் சற்று எதிர்பார்க்காத நிலையில் இஷான் கிஷான் அதிக விலைக்கு ஏலம் போனார். மும்பை, குஜராத், ஐதராபாத் அணி இவரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியாக இருந்தது.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவரை நடந்த ஏலத்தில் இஷான் கிஷான்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களில் இஷான் கிஷான் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார்.