விளையாட்டு
ஏலம் விடுபவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - ஐபிஎல் ஏலம் பாதியில் நிறுத்தம்
15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இலங்கை வீரர் அசரங்காவை ஏலம் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது ஏலம் விட்ட ஹூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அரங்கமே மெளனித்தது. இதனையடுத்து ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.