விளையாட்டு
ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதி போட்டி: இந்தியாவுக்கு 112 ரன்கள் இலக்கு
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 விக்கெட்டுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆன்டிகுவா:
இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் ஜூனியர் உலகக் கோப்பை 2-வது காலிறுதி போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் மெஹரோப் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவிகுமார் 4 விக்கெட்டுகள், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 50 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல- தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு